![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUXSKSHBbX9OebQNRjhwNaqtYFbz-5sRJfpcYYgkAgWp6kLTOF-lfZKheFqPvoIjiMDS1OWOur7curzEAgoOqw8WfS8SiJiRCUiOGskJO5Rt377sJ6LzJ5CehX-_8XF70tsBGUoPi1vJBm/s200/j.c.kumarappa.jpg)
நிகழ்வுகள் இப்படியிருக்குமென்றால் , பழைய மற்றும் முன்னேறிய தொழில்மய சமூகங்களில் நிலவாத ஒரு சூழல் இங்கே நிலவக்கூடும்.(அங்கே எப்போதும் நிலவியதில்லை). பெயரிட்டு சொல்வதென்றால் , உடனடி உற்பத்தியாளர்கள் தங்களுடைய உழைப்பாலும் ஒய்வாலும் தங்களுடைய முன்னேற்றத்தை தாங்களே உருவாக்குவதோடு அதனுடைய தரத்தையும் வளர்ச்சியையும் நிர்ணயம் செய்ய முடியும்.சுய நிர்ணயம் அடித்தளத்திலிருந்து பயணித்து , தேவைகளுக்கான வேலை என்பதிலிருந்து முற்றிலும் மன நிறைவு அளிக்கக்கூடிய ஒன்றாக விரிவடையக்கூடும்.
ஆனால் இத்தகைய தெளிவற்ற ஊகங்களால் கூட , சுய நிர்ணயத்திற்கான வரையறைகளை உணர்வற்று ஒப்புக்கொள்ளவேண்டியிருக்கிறது.மூளை மற்றும் பொருள் சார்ந்த சுரண்டல்களை அகற்றுவதால் புதிய வளர்ச்சிக்கான முன்-தேவைகளை நிலைநாட்டக்கூடிய முதல் புரட்சி தன்னியல்பான ஒரு செயலாக இருக்கும் என்று கருதுவது மிகக்கடினம்.மேலும் இந்த சுயமான வளர்ச்சி, இன்று உலகையே வடிவமைக்கும் இருபெரும் தொழில்மய அங்கங்கள் புது காலணியத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கைவிடக்கூடிய கொள்கைமாற்றத்தை முன்அனுமானக்கிறது. இப்போதைக்கு அப்படியொரு மாற்றத்திற்கான அறிகுறிகள் ஏதுமில்லை.
-- Herbert Marcuse - One Dimensional Man - Beacon Press - 1971
படம் - ஜே.சி.குமரப்பா
இந்தியாவின் தொழில்மயம் - 3
இந்தியாவின் தொழில்மயம் - 2
இந்தியாவின் தொழில்மயம் - 1
(முற்றும்)
No comments:
Post a Comment