முறையிட ஒரு கடவுள்

 

என் முதல் சிறுகதைத் தொகுப்பு முறையிட ஒரு கடவுள் வருகிற ஜனவரி 10ஆம் தேதி கோவில்பட்டியில் மணல் வீடு இலக்கிய வட்டம் நூல் வெளியீட்டு நிகழ்வில் வெளியிடப்படுகிறது. 2009 - 10இல் இரண்டு கதைகளை எழுதினேன்.மற்ற கதைகள் 2015க்கு பின்னர் எழுதப்பட்டவை.மொத்தமாக பதினான்கு கதைகள் கொண்ட தொகுப்பு. மொத்தமாக வாழ்நாளில் ஐந்து புத்தகங்கள் கொண்டு வந்தால் போதும் என்பது என் எண்ணம்.தஸ்தாயெவ்ஸ்கி பற்றி எப்படியும் ஒரு புத்தகத்தை கொண்டு வந்து விடுவேன்.இன்னும் சில கட்டுரைகள் சேர்க்க வேண்டும். மற்றபடி மூன்று புத்தகங்கள் எழுதுவேன்.அதற்கு அப்பாலும் எழுதினால் மகிழ்ச்சிதான்.எழுத்து சார்ந்து ஒரு நிதானம் வந்திருக்கிறது.ஒரு வரைவு மனதில் உண்டாகியிருப்பதை உணர முடிகிறது.பெரிய ஆர்ப்பாட்டங்கள் , வெளிச்சங்கள் எதுவும் இல்லாமல் இங்கு தொடர்ந்து எழுத முடியும்.இந்த பத்து வருடங்களில் அவதியான மனநிலையிலிருந்து மெல்ல வெளியேறியிருக்கிறேன். இந்த தொகுப்பில் உள்ள கதைகளை போல இனி எழுத முடியாது.அந்த மனநிலை முடிந்துவிட்டது. 

எனக்கு மாய தந்திரக் கதைகளை எழுத வேண்டும் என்ற ஆவல் உள்ளது. நாவல் எழுத முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் குறுநாவல் எழுத முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. கட்டுரைகள் எழுதும் ஆர்வம் குறைந்துவிட்டது.வரும் ஆண்டுகளில் நிறைய வாசிக்க வேண்டும் தொடர்ச்சியாக எழுத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.இந்தத் தொகுப்பு வெளியாவதில் நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

முறையிட ஒரு கடவுள் - மணல் வீடு பதிப்பகம்

 

 


2 comments:

Bram said...

Dear Writer
Readability is good,
Fluency of narration is about 75%
Reliability of Plot structure: unstable in one or two stories
Truncated and patchy stories: 1 so far.
There is a feeling that one is reading a contrived story is inevitable
about the film editing story.

I will be able to give a clean picture after finish the last 2 stories
(Though I have read them in Manal Veedu

Brammarajan

சர்வோத்தமன் சடகோபன் said...

அன்புள்ள பிரம்மராஜன் அவர்களுக்கு,

உங்கள் வாசிப்புக்கு மிக்க நன்றி.

நன்றி
சர்வோத்தமன்.