நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்!


செந்தமிழ்க்கிழார் என்பவர் எழுதியுள்ள "நீங்களும் கோர்டில் வாதாடலாம்" என்ற சிறு புத்தகம் தனி பிராது (Private compliant) தாக்கல் செய்து அதை எப்படி வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றங்களில் நடத்துவது என்பதை பற்றிய நடைமுறைகளை பற்றி விளக்குகிறது.இதில் காவல் துறை அதன் நடைமுறை, நீதிமன்றங்கள் அதன் பிரிவுகள் மற்றும் நடைமுறை, தனி பிராதை எப்படி தாக்கல் செய்வது , வழக்கில் தோற்றால் மேற்கொண்டு செய்ய வேண்டிய மேல் முறையீடு , சீராய்வு மனு ஆகியவற்றை பற்றி ஒரளவு விளக்கமாக சொல்கிறது.

ஒரு எழுத்தாளனுக்கு 

1. இந்திய அரசியல் சாசனம் (Indian Constitution)
2. குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC)
3. இந்திய உரிமையியல் நடைமுறைச் சட்டம் (CPC)
4. இந்திய சாட்சிய சட்டம்(Indian Evidence Act)
5. இந்திய தண்டனை சட்டம் (Indian Penal Code)

ஆகிய ஐந்து புத்தகங்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.தமிழ் எழுத்தாளன் நிச்சயம் தனி பிராது கொடுக்கும் அளவுக்கு தைரியமானவர் இல்லை என்பது உண்மைதான்.ஆனால் மேலே சொல்லியுள்ள ஐந்து புத்தகங்கள் பற்றி எளிய அறிமுகமாவது ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டும்.இவை அனைத்தும் தமிழில் கிடைக்கிறது.

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் ! - செந்தமிழ்க்கிழார் - நர்மதா புத்தகம்.

No comments: