2019


2019 ஆம் ஆண்டு சிக்கல்கள் ஏதும் இல்லாத வருடமாக இருந்தது.இந்த ஆண்டிலும் பெங்களூரில் வீடு மாற வேண்டியிருந்தது.வேலையில் பெரிய சிக்கல்கள் ஏதும் இல்லை.அடுத்த வருடம் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று தோன்றுகிறது.வேலை சார்ந்தும் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.இரண்டு குழந்தைகளை சமாளிப்பதற்குள் நாள் முடிந்துவிடுகிறது.இந்த வருடம் நன்றாக வாசித்தேன்.விஷ்ணுபுரம் நாவலையும் கிருஷ்ணன் அதற்கு எழுதிய விமர்சன நூலையும் முன்வைத்து எழுதிய கட்டுரை நிறைவான அனுபவமாக இருந்தது.உலவ ஒரு வெளி , ஜனனம் ஆகிய இரண்டு சிறுகதைகள் எழுதினேன்.ஜனனம் மணல் வீடு இதழில் வரும் என்று நினைக்கிறேன்.வரும் 2020யில் முதல் சிறுகதை தொகுப்பு பிரசுரமாகும்.

ட்டய்கு ரியோக்கன் கவிதைகளின் மொழிபெயர்ப்பு மற்றும் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை முன்வைத்து எழுதும் கட்டுரைகளை தொடர வேண்டும்.இவற்றை அடுத்தடுத்த வருடங்களில் புத்தகங்களாக கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.பெளத்தம்,திரைப்படங்கள்,பெருநகரங்கள் - தொழில்மயம் - அந்நியமாதல் - அடையாளம் பற்றிய கட்டுரைகளையும் புத்தக விமர்சனங்களையும்  தொடர்ந்து எழுத வேண்டும்.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.


No comments: