இந்தியாவின் தொழில்மயம் - 4


நிகழ்வுகள் இப்படியிருக்குமென்றால் , பழைய மற்றும் முன்னேறிய தொழில்மய சமூகங்களில் நிலவாத ஒரு சூழல் இங்கே நிலவக்கூடும்.(அங்கே எப்போதும் நிலவியதில்லை). பெயரிட்டு சொல்வதென்றால் , உடனடி உற்பத்தியாளர்கள் தங்களுடைய உழைப்பாலும் ஒய்வாலும் தங்களுடைய முன்னேற்றத்தை தாங்களே உருவாக்குவதோடு அதனுடைய தரத்தையும் வளர்ச்சியையும் நிர்ணயம் செய்ய முடியும்.சுய நிர்ணயம் அடித்தளத்திலிருந்து பயணித்து , தேவைகளுக்கான வேலை என்பதிலிருந்து முற்றிலும் மன நிறைவு அளிக்கக்கூடிய ஒன்றாக விரிவடையக்கூடும்.

ஆனால் இத்தகைய தெளிவற்ற ஊகங்களால் கூட , சுய நிர்ணயத்திற்கான வரையறைகளை உணர்வற்று ஒப்புக்கொள்ளவேண்டியிருக்கிறது.மூளை மற்றும் பொருள் சார்ந்த சுரண்டல்களை அகற்றுவதால் புதிய வளர்ச்சிக்கான முன்-தேவைகளை நிலைநாட்டக்கூடிய முதல் புரட்சி தன்னியல்பான ஒரு செயலாக இருக்கும் என்று கருதுவது மிகக்கடினம்.மேலும் இந்த சுயமான வளர்ச்சி, இன்று உலகையே வடிவமைக்கும் இருபெரும் தொழில்மய அங்கங்கள் புது காலணியத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கைவிடக்கூடிய கொள்கைமாற்றத்தை முன்அனுமானக்கிறது. இப்போதைக்கு அப்படியொரு மாற்றத்திற்கான அறிகுறிகள் ஏதுமில்லை.

-- Herbert Marcuse - One Dimensional Man - Beacon Press - 1971

படம் - ஜே.சி.குமரப்பா

இந்தியாவின் தொழில்மயம் - 3

இந்தியாவின் தொழில்மயம் - 2

இந்தியாவின் தொழில்மயம் - 1

(முற்றும்)



இந்தியாவின் தொழில்மயம் - 3





எனினும் , மற்றொரு மாற்றம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. தொழில்மயமும் தொழில் நுட்பத்திற்கான அறிமுகமும் பின்தங்கிய நாடுகளின் பாரம்பரிய வாழ்க்கை மற்றும் உழைப்பு முறையால் தீவிர எதிர்ப்பை சந்திக்குமென்றால் , அந்த எதிர்ப்பு எளிதானதும் சிறந்ததுமான வாழ்க்கை உருவாகுமென்ற தெளிவான வாய்ப்பு உள்ள நிலையிலும் கைவிடப்படாதென்றால் இந்த தொழில்நுட்பத்திற்கு முந்தைய பாரம்பரியமே வளர்ச்சிக்கும் தொழில்நுட்பத்திற்குமான ஆதாரமாக அமையக்கூடாதா?

பின்தங்கிய நாடுகளில் உள்ளவர்களை மனித இருப்புக்கான வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்க இயலாத வகையில் செய்யும் அடக்குமுறை மற்றும் சுரண்டல் சக்திகளை(பொருள் மற்றும் சமயம்) அகற்றி பாரம்பரிய வாழ்க்கை மற்றும் உழைப்பு முறைகளுக்கு மேல் தொழில்நுட்பத்தை திணிக்காது அவைகளின் சொந்த தளத்தில் முன்னேறவும் நீட்டித்துகொள்ளவும் கூடிய வகையில் அமைய இந்த சுயமான வளர்ச்சி ஒரு திட்டமிட்ட கொள்கையை கோருகின்றது. சமூக புரட்சி, வேளாண்மை சீர்திருத்தம் மற்றும் மக்கள் தொகையை கட்டுபடுத்துதல் இவற்றின் முன்-தேவைகள்.ஆனால் தொழில்மயம் முன்னேறிய சமூகங்களின் பாங்கில் இருக்க கூடாது.இயற்கை வளங்கள் அடக்குமுறை ஆக்கிரம்பிப்புகளிலிருந்து நீக்கப்படுமானால் சுயமான வளர்ச்சி இத்தகைய பகுதிகளில் உண்மையிலேயே சாத்தியம் என்று தான் தோன்றுகிறது.அப்படியாக அவை ஒரு பிழைப்புபாக மட்டும் அல்லாமல் மனித வாழ்வை அளிக்ககூடியதாகவும் இருக்கும்.அத்தகைய இயற்கை வளங்கள் இல்லாத இடங்களில் , சிறிது சிறிதான தொழில்நுட்ப உதவியால் பாரம்பரிய வடிவத்துக்குள் இருந்துகொண்டே சீராக அதை போதுமானதாக சாத்தியப்படுத்த முடியாதா?

(தொடரும்)

-- Herbert Marcuse - One Dimensional Man - Beacon Press - 1971

படம் - சூரிய சக்தியை முன்னிறுத்தி பேசிய பண்முக ஆளுமை கோசாம்பி

இந்தியாவின் தொழில்மயம் - 2

இந்தியாவின் தொழில்மயம் - 1




பார்வை





சோப்பு பவுடர் விற்க வரும் பெண்ணின் பார்வை. அந்த வீட்டு பெண்ணின் பார்வை.விற்பனை பெண் என்ன படித்திருக்கிறாள் என்பதற்கு பி.ஏ. என்கிறாள். சாதி - கிறுஸ்துவம். இருந்தது போலவே இருக்கக்கூடாதா என்ற வீட்டு பெண்மனியின் கேள்விக்கு பதிலாய் சிறிய சயசரிதை. இதில் விற்பனை பெண்ணின் பார்வை இந்த சோப்பு பவுடர் துணிக்கும் அழுக்குக்கும் இடையில் புகுந்து அழுக்கை நீக்கும் என்பதில் இருக்கிறது. இன்னும் பல வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதில் இருக்கிறது.மற்றவருக்கோ பார்வை அவள் படிப்பில் , சாதியில் இருக்கிறது.பொழுதை கழிப்பதில் இருக்கிறது.தன்னுடைய தங்கை ஒரு மழை நாள் இரவில் கண்ணை இழந்துவிட்ட பின் அந்த வீடு அதன் பார்வையை இழந்தது.ஒரு வயோதிகர் பிச்சை கேட்க வந்த பொழுதில் கர்த்தரை ஜபி வெளிச்சம் உண்டாகும் என சொல்லி செல்கிறார். கர்த்தரை தாயும் அக்காளும் ஜபிக்கிறார்கள்.தந்தைக்கு விருப்பமில்லை. தங்கைக்கு லேசாக பார்வை திரும்புகிறது.தந்தையும் ஜபிக்கிறார். தங்கைக்கு முழுவதுமாக பார்வை திரும்பி அச்சமயம் டீச்சர் டிரெயினிங் சென்று கொண்டிருக்கிறாள்.இதில் அந்த விற்பனை பெண்ணின் தத்துவ பார்வை.பிரக்ஞைபூர்வமான பார்வை.அவளுடைய தங்கையின் பார்வை. முக்கியமாக கர்த்தரின் பார்வை. வாதை இனி உன் கூடாரத்தை அனுகாது என்பதாக கர்த்தரின் பார்வை.இந்த சுயசரிதை முடியும் போது வீட்டு பெண்ணுக்கு கிறுஸ்துவளாக அவள் மாறியதிலிருந்த விமர்சனப் பார்வை போய்விடுகிறது. பிரக்ஞை இருந்தால் தானே விமர்சனம்.விற்பனை பெண்ணின் சுயசரிதையில் அவள் பிரக்ஞையை இழந்துவிடுகிறாள்.இதில் இன்னொன்று .அதே விற்பனை பெண்ணிடம் இருக்கும் நடைமுறை பார்வை. மீதி இரண்டு சாம்பிள் சோப்பு பவுடர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டு காரர்கள் இருக்கும் போது அவர்களிடமே வந்து தந்து விடுவதாக சொல்லி கிளம்புகிறாள்.எல்லா மனிதர்களிடம் இரண்டு பார்வைகள் இருக்கிறது.லெளகீக பார்வை. தத்துவ பார்வை.அதை இந்த சிறுகதை சிறப்பாக சொல்கிறது. மிக சாதாரணமாக ஒரு விற்பனை பெண் வந்து செல்லும் காட்சி. அதில் தான் எத்தனை பார்வை. நான் அசந்து போய்விட்டேன். அசோகமித்திரன் பார்வை என்ற இந்த சிறுகதையில் இன்னும் எனக்கு தெரியாத எத்தனையோ உள் சரடுகள் உள்ளன.
அசோகமித்திரன் சாதாரணமாக ஏதேதோ சொல்லிவிடுகிறார்.