சரிதான்


நீர்குமிழி உடைகிறது
சருகுகள் உதிர்கிறது
பனித்துளி மறைகிறது
கிளையிலிருந்து மேலெழுகிறது ஆகாயத்துப்பறவை
கரங்களின் அரவனைப்பை விலக்குகிறது குழந்தை
கருப்பையின் பாதுகாப்பிலிருந்து
மண்ணில் தோன்றுகிறான் தேவதூதன்
நாளின் முடிவை குறிப்புணர்த்த வருகிறது அந்தி

நீங்கள்

வேபர் பிஸ்கட்டை உடைத்து வாயில் குதப்பிக் கொள்கிறீர்கள்
இறந்த குழந்தையை மீட்க திருமணம் செய்து கொள்கிறீர்கள்
ஆசனத்துக்கு கழுமரத்தில் அமர்கிறீர்கள்

எல்லாம் முறிவுதான்
எல்லாம் தொடக்கம்தான்
எல்லாம் சரிதான்.

No comments: