இரண்டாம் உலகம்





அவள் இரண்டாம் உலகத்திலிருந்து விரட்டப்பட்டிருக்கிறாள்
அவள் அருகில் யாருமில்லை
அவளின் பெற்றோர் இறந்துவிட்டனர்
அவளது உடன்பிறப்புகள் அவளை மறந்துவிட்டனர்
அவளது நண்பர்கள் அவளை செருப்பால் அடித்தனர்
அவளது காதலன் அவளின் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறான்
தருணம் சாத்தியப்பட்டிருக்கிறது.
உன்னை மிகவும் பிடித்திருக்கிறது என்று அபத்தம் பேசியவள்
உன்னைச் சுரண்டியவள்
ஆன்மாவை சிதைத்தவள்
தற்கொலைக்கு தூண்டியவள்
பளபளக்கும் சவரக்கத்தி இருக்கிறது என்னிடம் என்றான்.
சவரக்கத்தியின் நுனி அறுக்கையில் ஐயகோ என்பாள்
அந்த நாடகத்தனத்தை சகிக்க இயலாது.
எனது இரண்டாம் உலகத்தின் கணக்கையும் நேற்றே அழித்துவிட்டேன்.
அவளால் கட்டமைக்கபட்ட உலகம் அழிகையில் அழிகிறது
அவளால் என்னில் கட்டமைக்கப்பட்டவையும்.
இனி அவள் பெயரற்றவள்.இருப்பற்றவள்.
நீளமான சாலையில் நிறைந்திருக்கிறது நம் உலகம்.
என் ஆன்மாவும் மலர்ச்சியுற்றிருக்கிறது.
வா நாம் தேநீர் அருந்தலாம்.


No comments: