மென்புன்னகை


முகுந்த் நாகராஜனின் கவிதைகளை வாசிக்கும் போது வாசல் படிக்கட்டில் அமர்ந்திருக்கும் இளம் அன்னை தை தை என்று நடைபழகும் தன் குழந்தையை பார்த்தபின் , களைப்பான மென்புன்னகையோடு தலைமுடியை விரல்களால் நீவியவாறு வெளியை நோக்கும் அழகான சித்திரம் தோன்றுகிறது.அழகான குட்டி குட்டி சித்திரங்கள்.ஒரு எளிய அபத்தம்.அந்த அபத்தத்தை மென்புன்னகையால் கடந்து நடைமேடை ஏறுகிறார்கள் எல்லோரும்.



சிக்னல்

தண்டவாளத்தில்
காலி தண்ணீர் பாட்டில்களை
சேகரித்துக் கொண்டிருந்தவள்,
தொலைவில் வரும் ரயிலை
கை காட்டி
நிறுத்தச் சொல்லி விட்டு
நடைமேடையில் ஏறுகிறாள்
சிரித்தபடி.

No comments: