இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 2





கால்நடைகள் செம்மறிஆடுகள் மற்றும் ஆடு மேய்ப்பர்களுக்கு மிகுதியான காய்கறி வளங்கள் , அவற்றுடன் சேர்ந்து பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கிறது என்பது வேட்டைக்கூட உயிர்வாழ்வதற்கு அத்தனை அவசியமானது இல்லை என்பதை தெளிவாக்குகிறது.இனிமையான இந்திய வானிலையில் ஒருவர் தன் ஜீவிதத்தை எதையும் கொல்லாமலே ஒப்புநோக்க சிறப்பாக காப்பாற்றிக் கொள்ள முடியும்.இந்த அடிப்படை யதார்த்தம் பழங்கால பழங்குடிகள் வாழ்வதற்கான காரணங்களை மட்டும் சொல்லவில்லை.இவை இந்திய சமூகவியல் சிந்தனையை தெளிவுபடுத்துகிறது. குணாம்சியத்தில் இந்திய சமயங்களான புத்தமும் ஜெனமும் உயிர் வாழ்வதை பாவமாக கருதுகிறது. இத்தகைய ஒரு அறநெறி ரத்தமற்ற உணவு சேகரிப்பு முறையிலான பொருளாதாரம் முன்வரலாற்று இந்தியர்களுக்கு தேவையான வாழ்க்கை ஜீவிதத்தை தந்திருக்காவிட்டால் சாத்தியப்பட்டிருக்காது.

இரும்பு காலத்தை சேர்ந்த ஏர் உழவு விவசாயத்தை பழகிய மக்கள் முதலில் கங்கையின் சமவெளி பகுதிகளின் எல்லைக்குட்பட்டு தான் வாழ்ந்தார்கள்.அத்தகைய செழிப்பான பகுதியிலிருந்து அவர்கள் தெற்கு பக்கம் அதிக சமவெளி காடுகள் நிரம்பிய தீபகற்ப இந்தியாவின் தக்காணத்து பகுதிகளுக்கு வந்தார்கள்.வன்முறையின் துனையோடு நடந்த ரோமின் இரும்பு காலத்திய கெளல் பழங்குடி ஆக்கிரமிப்பு மற்றும் ரெயின் பகுதிக்கு அப்பாலான காடுகளை கொணர்ந்ததுபோல இந்த நுழைதல் நடக்கவில்லை. வடக்கிலிருந்து வந்த உழவர்களை தெற்கிலிருந்த வன மேய்ப்பர்கள் மற்றும் உணவு சேகரிப்பாளர்களுக்குமான சந்திப்பு பரஸ்பரம் புதுப்பண்பாட்டை ஏற்கும் செயலை முடக்கிவிட்டிருக்கிறது.உணவு சேகரிப்பாளர்கள் விவசாயத்தை கற்றுக் கொண்டது போல விவசாயிகள் உணவு சேகரிப்பில் தங்களை ஈடுபடுத்தி கொண்டதோடு மட்டுமல்லாமல் காட்டு உணவு வகைகளை வேளாண்மை செய்யவும் கற்றுக்கொண்டனர். உற்பத்தியாளர்களுக்கும் சேகரிப்பாளர்களுக்குமான இந்த அனுசரித்து போகும் உறவு இந்தியாவின் கடந்தகால அமைப்பையும் மாதிரியையும் புரிந்து கொள்ள உதவுகிறது. இது இன்றைய சமூக ஏற்பாட்டில் பிரதிபலிப்பதோடு சாதியின் மூலங்கள் மற்றும் சாதி அமைப்பு பற்றியும் விளக்குகிறது.1

இந்தியாவின் பல பகுதிகளில் அப்பகுதியின் பழங்குடி மக்களுடைய பெயர்களும் அப்பகுதியின் விவசாய சாதியின் பெயர்களும் ஒன்றாக இருக்கும் அதே நேரத்தில் பழங்குடி மக்களுக்கும் விவசாயிகளுக்குமான சாதி வித்யாசம் அவர்களுக்கிடையே திருமணம் மற்றும் வேறு எந்தவித தொடர்புகளையும் தடுக்கிறது.புலம்பெயர்ந்த விவசாயிகளும் அதே இடத்தில் வசித்த உணவு சேகரிக்கும் பழங்குடியினரும் பொது காரணத்திற்காக வனப்பகுதிகளில் சந்தித்து கொண்டதால் இந்த பெயர்களின் ஒப்புமை ஒரே மூலத்திலிருந்து வந்ததாக இருக்கலாம்.சாதிய அமைப்பின் இரு முக்கிய குணாசியங்கள் - தங்கள் குழுவில் அல்லாதவரோடு திருமணம் செய்து கொள்ளவதற்கான தடை மற்றும் அந்நியரிடமிருந்து உணவு பெற்றுக்கொள்ளுதலுக்கு எதிரானது - இவை குறிப்படத்தக்க வகையில் பழங்குடி சமூகங்களுக்கும் விலக்கு. ஆக சாதிய அமைப்பு என்பது உணவு சேகரிப்பு செய்த அந்த மண்ணின் பழங்குடியினர் புலம்பெயர்ந்த ஏர்உழவர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிறுவுவதற்கு பிற்பாடு உருவாக்கிய முயற்சியாக எண்ணிக் கொள்ளலாம்.

1 - '"The Untouchables" of India' , by M.N.Srinivas and Andre Betelle; Scientific American,December ,1965

கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.




No comments: