அறிவும் அதிகாரமும்


பி.ஏ.கிருஷ்ணன் விஞ்ஞானத்தை விரும்புபவர்கள் கலைகளையும் இலக்கியத்தையும் விரும்புகிறார்கள் , ஆனால் மறுதரப்பு அப்படி இருப்பதில்லை என்கிறார்.இதற்கு காரணமாக அவர் சொல்வது விஞ்ஞானம் கச்சிதமானதும் நிரூபணவாதத்தையும் கொண்டது என்றும் அதை இவர்களால் புரிந்து கொள்ள முடியாததால் அதை வெறுக்கிறார்கள் என்றும் சொல்கிறார்.முறையான கல்வியும் , வாய்ப்பும் , வழிகளும் இருந்தால் யாரும் விஞ்ஞானம் கற்க முடியும்.தொழில்நுட்பக் கல்வியும் அப்படியானதே.சுமாராக படித்த மருத்துவர்கள் , பொறியியலாளர்கள் வேலையில் சேர்ந்து துறை சார்ந்த விஷயங்களை ஒரு வருடத்தில் எளிதல் கற்கிறார்கள்.இது உண்மை. விஞ்ஞானத்தை வழிபடுவதும் அதை மனிதனுக்கான விடுதலையாக பாவிப்பதும் அறிவுத்துறைகளில் அதை உயர்த்திற்கு எடுத்துச்செல்வதும் உண்மையில் மிகப்பெரிய மனித அவலம்.

இப்படி பேசும் போது தான் நாம் இட ஒதுக்கீடு குறித்தும் கவலை கொள்கிறோம்.இட ஒதுக்கீட்டால் கல்வியின் தரம் குறைகிறது என்கிறார்கள்.துறை சார்ந்த அறிவை வேலையில் சேர்ந்த சில வருடங்களில் பலரும் கற்கிறார்கள்.இது நடைமுறை உண்மை.நீங்கள் கல்லூரியில் கற்பது என்பது வெறுமன ஒரு ஏற்பாடு.அதை பரவலாக்குவதும் எல்லோருக்கும் கொண்டு செல்வதும் தான் முக்கியம்.தரத்தால் ஒன்றும் மாயம் நிகழ்ந்துவிடுவதில்லை.உயர்கல்வியின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலை விஞ்ஞானத்தின் மீதான வழிபாட்டால் வருகிறது.விஞ்ஞானத்தின் மீதான வழிபாடு அறிவின் மீதான மயக்கத்திலிருந்து வருகிறது.கல்வியின் தரம் என்று சொல்லி உயர்கல்விக்கு நாம் பற்பல தடைகளை உருவாக்குகிறோம்.கிராமத்து சிறுநகரத்து மனிதர்களை உயர்கல்வியை அடையவிடாமல் செய்கிறோம்.அப்படியும் மீறி வந்து சேர்பவர்களை ஆச்சிரியமாக புருவம் தூக்கி பார்க்கிறோம்.உயர்கல்வி உயர்த்தப்பட்ட பெருநகரத்து மனிதர்களுக்கு சென்று சேர்கிறது.அவர்கள் கற்கிறார்கள்.அதிகாரத்தில் அமர்கிறார்கள்.திட்டங்கள் தீட்டுகிறார்கள்.கிராமத்து சிறுநகரத்து மனிதர்களை பெருநகரங்களுக்கு கொண்டு வந்து அடிமையாக்கிவிடுகிறார்கள்.

இதற்கு நாம் கிராமத்து சிறுநகரத்து பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்கிறார்கள்.உண்மையில் ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி வருவது எத்தனை கடினமானது என்று இவர்கள் அறிவார்களா.என் மகன் பத்து வயதிலேயே ஷேக்ஸ்பியரை படித்தான் என்பவர்கள் சிறுநகரத்து கிராமத்து மனிதர்களுக்கு அதற்கான வாய்ப்புகளும் பண்பாட்டு சூழலும் இருக்கிறதா என்பதை குறித்து என்ன புரிதல் கொண்டிருக்கிறார்கள்.உயர்கல்விக்கான ஒவ்வொரு தடுப்பும் வன்முறையானது.தகர்க்கப்பட வேண்டியது.நீங்கள் முதலில் கிராம , சிறுநகரத்து, பெருநகரத்து கல்விமுறை , பண்பாட்டுச்சூழலை சமதளத்துக்கு கொண்டு வந்த பின்னர் உயர்கல்விக்கான தடுப்புகளை கொண்டு வாருங்கள்.அமெர்த்தியா சென் தன் புத்தகம் ஒன்றின் தலைப்பு The Country of first boys.அவர்களுக்குத்தான் கல்வியும் வாய்ப்பும் அதிகாரமும்.

No comments: