எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது





வைக்கம் முகமது பஷீரின் எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது.குளச்சல் மு.யூசப் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது.குரானின் முதல் வார்த்தை வாசிப்பீராக! வாசித்ததில் நிறைய மகிழ்ச்சி.1951ல் எழுதியிருக்கிறார்.அட்டை வடிவமைப்பு மிக அற்புதமாக இருக்கிறது.ஏதோ ஒரு குழந்தையின் கனவு.குஞ்ஞுபாத்துமாவின் கனவு.யானையில் வருவானோ தன்னைக் கட்டிக்கொள்ள.இறுதியில் கக்கூஸ் கட்டிக்கொடுக்கும் நிஸார் அகமதுவை கட்டிக்கொள்கிறாள்.கனவிலிருந்து நடைமுறையை நோக்கி.நிஸார் அகமதுவில் பஷீர்.

அழகான பெயர்.முகம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய மகளார் பாத்திமாவின் பெயர்.ஆயிஷா குஞ்ஞுபாத்துமாவின் பெயரை கேட்டுவிட்டு சொல்கிறாள்.

"ஆயிஷா வீவி ஆரு புள்ளே ?"

குஞ்ஞுபாத்துமா சொன்னாள்.

"முத்து நபிக்கெ பெஞ்சாதி"

ஆயிஷா குஞ்ஞுபாத்துமாவுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கையில் "இனி என் மகள் என்னை அடிக்கத் தொடுங்குவாள்.அதற்கும் எனக்கு விதி இருப்பதாகத்தான் தெரிகிறது.'அப்போதும் ஆயிஷா பீவி புன்னகை பூத்த முகத்துடன் காணப்பட்டாள்.'என்று உலகம் சொல்லும்".

"என்னத்தெ துட்டாப்பி?" இது குஞ்ஞுபாத்துமா.

குஞ்ஞுபாத்துமா ஆயிஷா வினது உரையாடல்கள் ....துட்டாப்பி.கள்ள புத்தூசே.

நாவலின் முதல் வரிகள் - "அனேகமாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த்துபோல ஞாபகம்.ஏனென்றால் சிறுவயதென்பது நெடுந்தொலைவில் அல்லவா?".

இருப்பின் உவகை அகமகிழ்வால் மட்டுமே அடைக்கூடியது.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


No comments: