காந்தியின் கைகளில் ரத்தம் இல்லை





எல்லா புனித நூல்களின் ஏடுகளிலும் ரத்தம்.மார்க்ஸின் கைகளில் ரத்தம்.மனித ரத்தம்.நான் என் துணிகளை துவைத்துகொள்வதில்லை.வெளியில் நல்ல மழை.கவலையில்லை.மேலே கூரை இருக்கிறது.குளிர்.நல்ல கனமான உடைகள் இருக்கிறது.வாஷிங் மேஷினின் சத்தம் தொந்தரவு தருகிறது.அக்குள் முடி சிராய்பதற்கு பார்பர் ஷாப் செல்ல வேண்டும்.தட்டச்சு செய்ய சிறந்த மடிக்கணினி.மழையால் மின்சாரம் போய்விட்டால் கவலைவேண்டாம்.இன்வர்ட்டர் இருக்கிறது.செளகரியமாக இருக்கிறேன்.எதற்கும் கவலையில்லை.நான் காந்தியையும் விமர்சனம் செய்வதில்லை.ஆனால் நான் கண்டுகொண்டேன்.காந்தியின் கைகளில் ரத்தம் இல்லை.



No comments: